மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு – முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்!

Viduthalai
2 Min Read
அரசு, தமிழ்நாடு

தஞ்சை, பிப். 6- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால், அறுவ டைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கர பாணி நேற்று காலை (5.2.2023) ஆய்வு செய்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில், கடந்த 1.2.2023 முதல் 3.2.2023 வரை, பருவம் தவறி பெய்த திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தது.

மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் கொட்டி வைத்து இருந்த நெல்களும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதையடுத்து,பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கொள் முதலில் நெல் ஈரப்பதத்தினை 22 சதவீத மாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதனை நேரடியாக ஆய்வு செய்ய, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், உணவு, வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் அடங்கிய குழுவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இதைத் தொடர்ந்து, நேற்று (5.2.2023), உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை அருகே புத்தூர் கிராமத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில், மழைநீரில் சாய்ந்த நெற்பயிர்களை பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை காண் பித்தனர். இதையடுத்து, உக்கடை கிரா மத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்ட றிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகை யில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிட்டு உடனடியாக அறிக்கையை தயாரித்து வழங்குமாறு முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட் டுள்ளார். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மழையினால் நெற்கதிர்கள் சேத மடைந்துள்ளதை விவசாயிகள் காட்டி னர். மேலும் திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்து, 6.2.2023 அன்று முதல மைச்சரிடம் இந்த அறிக்கை வழங்கப் படும். கொள்முதல் நிலையங்களில் தற்போது 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஈரப்பதம் அதிக மாக இருப்பதால் 22 சதவீதம் வரை தளர்வு வேண்டும் என விவசாயிகள் கேட்டுள் ளனர். இதை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறப்படும். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எடுத்துக்கூறி காப்பீடுக்கான இழப் பீடும் பெற உரிய ஆலோசனையை முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மழையி னால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அந் தந்த மாவட்ட அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 78 ஆயிரம் எக்டேரில் நெல், உளுந்து, நிலக்கடலை பாதிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி அறிக்கையை தயாரித்து முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *