பிஜேபியினர் மட்டும் தான் ஆளுநர்களா? சிபிஅய் பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம்

1 Min Read
தமிழ்நாடு

கோவை,பிப்.13 ஆளுநர் நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா  நேற்று (12.2.2023) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜார்க்கண்ட் மாநில ஆளு நராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆளுநர்களாக நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சி.பி.ராதாகிருஷ்ணனின் நியமனம் புதிதல்ல. ஏற்கெனவே இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆளுநர்கள் ஒன்றிய அரசினுடைய பிரதிநிதிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆளுநர்களா? என்பதே இன்றைக்கு கேள்விக்குறியா கிறது. அவர்களை ஆளுநர் என்று சொல்லலாமா? மேலும் ஆளுநர் மாளிகைகள் ஒன்றிய அரசை கையில் வைத்திருக்கின்ற பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் மய்யங்களாக செயல்படுவதையும் நாம் பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, 6 பேரை ஆளுநர்களாக நியமித்தும் 7 ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதில் கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு பாஜகவின் மேனாள் மாநிலத் தலைவரும், தேசிய செய லாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஏற்கெனவே ஆளுநர்களாக இருந்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *