மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு படத்திறப்பு

1 Min Read

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 393ஆவது வார நிகழ்வாக மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 28-10-2023 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில்  ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் தலைமையில், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராம லிங்கம், இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணன் ஆகி 

யோர் முன்னிலையில், பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன், தி.மு.க.தலைமை கழக பேச்சாளர் மா.வள்ளிமைந்தன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். நிகழ்வில் தி.மு.க. வட்டச் செயலாளர் த.வ.லால்,கு.சங்கர், அமரன், செந்தமிழ் பரிதி, பிச்சை மணி, பத்மநாபன், கருப்பசாமி, ஆறுமுகம், ராஜா, விஜயகுமாரி, சிவகுமார், அறிவுமதி, அன்புமணி, புஷ்பா, பன்னீர்செல்வம், சுமதி மணி, அருள்விழியன், இன்பநிலா, கஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் தமிழ் மதி நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *