நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல்: பகல் 11 மணி நிலவரம்

Viduthalai
0 Min Read

மேகாலயா, நாகாலாந்தில் சட்டப்பேரவை தேர் தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27.2.2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர். மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 35.76 சதவிகிதமும் மேகால யாவில் 26.07 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *