…..செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
1 Min Read

நடந்தது மறந்து போயிற்றா..?

⭐மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக யாகம் தொடங்கினார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

>>ஏற்கெனவே நடத்திய யாகத்தில் தீ விபத்து நடந்தது மறந்து போயிற்றா?

கலைஞர் கூறியதுதான்…

⭐இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு நிலையான அரசே காரணம்.

– சொல்லுகிறார் பிரதமர் மோடி

>>ஹிட்லர் கூட நிலையான ஆட்சியைத்தான் நடத்தினார் என்று கலைஞர் கூறியதுதான் நினை விற்கு வருகிறது.

எதன்மீது சட்டப் போராட்டம்?

⭐ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம்.

– பி.ஜே.பி. அண்ணாமலை

>>ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று ஒன்றிய அரசின்மீது சி.ஏ.ஜி. கூறியிருக்கிறது; அதன்மீது சட்டப் போராட்டமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *