நிர்வாகத் திறனை மேம்படுத்த டிஜிட்டல் மயமாக்கும் ஆவணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

Viduthalai
2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, நவ.3  “தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்” ஆவணத்தை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

 இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.11.2023) தலைமைச் செயல கத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்  (Tamil Nadu Digital Transformation Strategy DiTN)  ஆவணத்தை வெளியிட்டார்.

 2021_20-22ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கையில், விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் பதிலளிக்கும் வகையிலமைந்த, வெளிப்படையான நிருவாகத்தைக் குடிமக்களுக்கு வழங்குவதை நோக்க மாகக் கொண்டு, மின்னாளுகையைப் படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன்மூலம் முழுமையானதொரு அரசாங்கத்தை எய்திடும் வகையில் “டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்” செயல்படுத்தப்படும். மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட மற்றும் அவர்களிடம் தாக் கத்தை ஏற்படுத்தும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின் மயமாக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டது. 

இந்த அறிவிப்புக்கிணங்க, தமிழ் நாடு அரசின் ஆளுமை மற்றும் நிர் வாகத்தின் செயல்திறனை மேம்படுத் திடவும், டிஜிட்டல் ஆளுமை மற்றும் அரசின் சேவை வழங்கலை மேம் படுத்துவதற்காகவும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால கொள்கைகள், நடை முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் முதல்முறையாக தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (ஞிவீஜிழி) வகுக்கப் பட்டுள்ளது. அரசின் துறைகள் தங்களுக்கான டிஜிட்டல் உருமாற்ற வியூகம் உருவாக்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் ஒரு வழி காட்டியாக தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூக ஆவணம் பயன்படும். 

அனைத்துத் துறைகளும் தங்களது முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள்  மற்றும் பயன்களை  எய்துவதற்கு தமிழ் நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் உதவும். மேலும், தமிழ்நாடு மக்களுக்கு விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய, பதிலளிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையான  நிர்வா கத்தை வழங்கும். தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம், டிஜிட்டல் முதிர்ச் சியை மதிப்பிடுவது முதல் தகவல் தொழில்நுட்ப வியூகத்தைச் செயல் படுத்துவது வரையிலான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

தமிழ்நாட்டில் டிஜிட்டல் மயமாக் கும் செயல்முறையை மேலும் வலுப் படுத்துதல், தொலைதூர இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் தேவை யான டிஜிட்டல் உள்கட்டமைப்பை பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப் புற மக்களுக்கு வழங்குதல்,மாநிலத்தை புத்தாக்கம் மற்றும் தொழில் முனை வுக்கான மய்யமாக மாற்றுதல், செய லிகள், வலைத்தளங்கள், கியோஸ்க் குகள்  போன்றவற்றின் மூலம் பொது மக்களுக்கு அரசு சேவைகள் வசதியாக கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களுடன் டிஜிட்டல் இணைப் புகளை மேம்படுத்துதல் போன்றவை தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். 

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை நிர்வாக அலுவலர் பெ.ரமண சரஸ்வதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *