திருச்சி, மார்ச் 7 வெளிமாநில தொழிலாளர்கள் 6 லட்சம் பேரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று (6.3.2023) திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர் திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள இ.எஸ்.அய். மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனை வளா கம், மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள், அறுவை சிகிச்சை மய்யம், மகப்பேறு சிகிச்சை மய்யம், குழந்தைகள் நல மருத்துவ மய்யப்பிரிவு, ஆய்வகங்கள், சித்தா பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை பிரிவு, சமையல் கூடம் உள் ளிட்ட இடங்களை நேரில் பார்வை யிட்டு, ஆய்வு செய்தார். மேலும் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை உட்கொண்டு அதன் தரத் தினை பரிசோதித்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்ட றிந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளி களிடம் கலந்துரையாடினார் பின்னர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப் படி திருச்சி இ.எஸ்.அய். மருத்துவ மனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவ மனை மிக சுகாதாரத்தோடு இருக்கிறது. இங்கு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளன. தனியார் மருத்துவ மனைக்கு நிகரான ஒரு மருத்துவ மனையாக திருச்சி இ.எஸ்.அய். மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல் மருத்துவ பிரிவு மிக சிறப்பாக செயல்படுவதோடு தினமும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பயன்பெற்று வருகின்றனர். நான் ஆய்வு மேற்கொண்ட போது சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வார காலத்திற்குள் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள், அதிகாரிகள் உறுதுணையோடு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக் கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட் டில் உள்ளனர். அவர்களின் பாது காப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.
பீகார் மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த ஆய்வுக் குழு சென்னையில் 5 அதிகாரிகள் தலை மையில் நேரடியாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள தொழிலாளர்கள் நாங்கள் மிகவும் பாது காப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு அதில் அவர் கூறினார்.