கழகத்தின் சார்பில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட பொது மேலாளருக்கு நன்றி!!

1 Min Read

கடந்த பிப்ரவரி 14 அன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை முதல்  இராமேசுவரம் வரை செல்லும்  ரயில்களை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி மண்டல திராவிடர் கழகத்தின் தலைவர் கா.மா.சிகாமணி  கோரிக்கையினை அனுப் பியிருந்தார். 

அதன்படி 7.03.2023 முதல் ரயில்  மதுரை யிலிருந்து இராமநாதபுரத்துக்கு  காலை 6.50 மணிக்கும், பிற்பகல்  12.30 மணிக்கும்,  மாலை 6.10 மணிக்கும் விடப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் பயன்படுத்தும் மாவட்ட மக்களும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வரும் பயணி களும் பெரும் பயன் அடைந்துள்ளனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கையை உடனடியாக செயல் படுத்திய மதுரை மண்டல பொது மேலாளர் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *