சென்னை, ஆக.21 வரும் காலங்களில் சென்னை அய்அய்டி-யில் மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் எம்டி (MD) பட்டங்கள் வழங் குவது குறித்து அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் சொந் தமாக மருத்துவக் கருவி களை வடிவமைக்க வேண் டுமென்றால், மருத்து வர்களும் பொறியாளர்களும் ஒரே கூரையின்கீழ் செயல் பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பொறியாளர்களை மருத் துவர்களாக மாற்றுவதை விட, மருத்துவர்களுக்குப் பொறி யியலில் பயிற்சி அளிப்பதே எளிதான அணுகுமுறையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலுமே மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அய்அய்டி-யின் நோக்கம் என்றும், அய்அய்டி கரக்பூர் ஏற்கெனவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து எம்டி படிப்பை வழங்கி வருவதுபோல, சென்னை அய்அய்டியும் மருத்துவமனையை ஏற் படுத்தி முறையான மருத் துவக் கல்வியை வழங்க திட்ட மிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

