எஸ்.குமாரதாஸ் படத்திறப்பு நினைவேந்தல் மாநில ஒருங்கிணைப்பாளர் பங்கேற்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நாகர்கோயில், ஆக. 18- திராவிடர் கழக மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மஞ்சுவின் இணையர் கழக அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் மறைவுற்ற எஸ்.குமாரதாஸ் அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி மந்தாரம் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் கழக மாவட்ட தலைவர் மா. மு. சுப்பிரமணியம் தலை மையில்  நடைபெற்றது.

கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் படத்தினை திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார்.

மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், துணை தலைவர் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் சு.இந்திரா மணி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ், தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணி மேகலை, கழக தோழர்கள் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.

அரும்பாக்கம் தாமோதரன் திமுக நிர்வாகி பொன்முடி, திராவிடர் கழக மாணவர் கழகப் பொறுப்பாளர் இனியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *