குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியீடு: நவ.1இல் முதல்நிலைத் தேர்வு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 13- குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஆண்டு வாரியான தேர்வு அட்டவணையின்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் ஆக. 11 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மூலமாக உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார் பதிவாளர், சட்டப் பேரவை உதவி பிரிவு அலுவலர், சிறைத்துறை அலுவலர், நன்னடத்தை அலுவலர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 821 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *