கொச்சி, நவ.3 கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக பேசிய விவகாரத்தில், ஒன்றியஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி அடுத்த கலமச்சேரியில் சமீபத்தில் நடந்த கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்ததில், சிறுமி உட்பட மூன்று பேர் பலியா கினர்; 50க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி சரணடைந்த டொமினிக் மார்ட்டின் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குண்டுவெடிப்பு குறித்து ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தன் சமூக வலைதள பதிவில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கேரள அரசு செயல்படுவதாக கூறிஇருந்தார். இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாக, அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மீது, கேரள காவல்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கேரள காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் பிரிவு ஒருங் கிணைப்பாளர் சரின் அளித்த புகாரைத் தொடர்ந்து, இரு சமூகத்திற்கிடையே பகையை வளர்க்கும் விதமாக கருத்து வெளியிட்டதாக ராஜிவ் மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் பிஜேபி மேனாள் நடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸில் இணைந்தார்
அய்தராபாத், நவ.3 தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேனாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஜி கிஷன் ரெட்டிக்கு அனுப்பியபதவி விலகல் கடிதத்தில், “கனத்த இதயத்துடன், பாஜகவில் இருந்து லீலகுகிறேன்” என கூறியுள்ளார். பாஜகவில் இருந்து விலகிய விவேக் வெங்கடசாமி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.