‘விடுதலை’ ஆண்டு சந்தா
அம்பத்தூர் நகர கழகத் தலைவர் பூ.இராமலிங்கம்- தெய்வமணி ஆகியோரின் பெயரன்களான இரா.ந.முகிலன், இரா.ந.மித்ரன் இரட்டையருக்கு, 9ஆம் (6-7-2026) பிறந்த நாளை முன்னிட்டு, பூ.இராமலிங்கம் சார்பாக இரண்டு விடுதலை ஆண்டு சந்தாக்கள் தொகை 4,000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், மாவட்டச் செயலாளர் க.இளவரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது. (சென்னை, 6.7.2026)
பன்னாட்டு மாநாடு குறித்து ஆலோசனை

வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் சங்கத் தலைவர் ரா.செந்தில்குமார், அக்டோபர் 11, 12 தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் பன்னாட்டு மாநாடு தொடர்பாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் கலந்துரையாடினார். (சென்னை, 6.7.2026)
விடுதலை சந்தா வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டக் காப்பாளராக நியமிக்கப்பட்ட சமத்துவமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றுக்கொண்டு, விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2000/- வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், மு.க.பகலவன். (சென்னை, 6.7.2026)
பெரியார் உலகம் நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான 1000 ரூபாயை 67ஆவது முறையாக வழங்கியுள்ளார். நன்றி.
