வெ.விஜயரத்தினம் அம்மையார் மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

அரசியல்

விருதுநகர், மார்ச் 24- விருது நகர் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியா தைச் சுடரொளி அ.வெங்கடாசலபதி அவர்களது இணையரும், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, வெ.மதி வாணன், செல்வத்தரசி, டாக்டர் வான்மதி ஆகி யோரது தாயாருமான‌ வெ.விஜயரத்தினம் அம்மையார் அவர்கள் (வயது 97) உடல்நலக் குறைவு காரணமாக 23.3.2023 வியாழன் அதி காலை 5 மணியளவில் இறுதி எய்தினார். ரோட் டரி கிளப் உதவியுடன் அம்மையாரின் கண்கள் கொடையாக வழங்கப் பட்டன. 

செய்தி அறிந்து திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங் கல் தெரிவித்து ஆறுதல் கூறினர். மாவட்ட தலை வர் கா.நல்லதம்பி, செய லாளர் விடுதலை தி.ஆத வன், மாவட்ட ப.க. தலை வர் பெ.த.சண்முகசுந்தரம், துணை அமைப்பாளர் மா.பாரத் மற்றும் தோழர் கள், உற்றார் உறவினர் நண்பர்கள் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். மூடச் சடங்குகள் இல்லாது மாலை 6 மணியளவில் இறுதி ஊர்வலமாகச் சென்று மயானத்தில் எரி யூட்டப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *