ஓசூர், மே 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒசூர் கிளையின் சார்பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றமைக்கு ஓட்டல் தமிழ்நாடு கூட்டரங்கில் எழுத்தாளர் கமலாலயன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சிவந்தி அருணாசலம், மனோன்மணி,எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஆடிட்டர் பாலசுந்தரம், சிபிஎம் கட்சி ஜெய ராமன், எழுத்தாளர் நாராயணி கண்ணகி, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பாலகிருஷ் ணன்,வாழ்த்துரை வழங் கினர், இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பி னர்கள் அசெ.செல்வம், கோ.கண்மணி ஆகியோர் கலந்துகொண்டு பய னாடை போர்த்தி திரா விடர் கழக வெளியீடான மார்ஸ்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் என்ற நூலை வழங்கி தங்களது வாழ்த்துகள் தெரிவித்தனர்.
விருது பெற்ற எழுத் தாளர் தமிழ்செல்வன் தனது ஏற்புரையில், எனக்கு விருது பெற்ற மகிழ்ச்சியைவிட நூறு நபர்கள் சேர்ந்து நூல்கள் படிப்பு வட்டத்தை துவங்கி ஒரு நூலையே நூறு நபர்கள் படித்து அதைப்பற்றி விவாதம் நடத்துவதுதான் நான் பெருமையாக, மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றார்.இந் நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் சங்கம் நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் தந்தையார் திராவிடர் கழகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
