முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, கோயில்களில் ‘அன்னதானம்’ வழங்கத் தடை கோரிய வழக்கை மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நபரின் பெயரில் ‘அன்னதானம்’ நடத்தப்படுவதைத் தவறு என கருத முடியாது என்றும், அரசு சமூக ஒற்றுமை மற்றும் ஜாதி ஒழிப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தக் கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ‘அன்னதானம்’ ஒரு நல்ல செயல் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

