பெங்களூரு, ஏப். 6 – கருநாடகத் தில், முஸ்லிம் இளைஞர் இத்ரீஸ் பாஷா, பசு குண்டர் களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசு குண்டர்களால், முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப் படும் நிகழ்வுகள் கருநாடகத் தில் வழக்கமானதாகி விட்டது. பசுவதைத் தடைச் சட்டமும் கருநாடகத்தில் அமலில் உள்ளது.
இந்நிலையில், கருநாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சாத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியின் வழியாக பசுமாடுகள் இறைச்சிக் காக கடத்தப்படுவதாக ‘ராஷ்ட்ரா ரக்சனா படை’ என்ற இந்துத்துவா அமைப்பை நடத்தி வரும் புனீத் கேரேஹள்ளிக்கு தகவல் கிடைத்ததாக கூறப் படுகிறது.
இதையடுத்து புனீத் தனது கூட்டாளிகள் 4 பேருடன் 31.3.2023 அன்று இரவில் சாத்தனூர் காவல் நிலையத்தின் அருகே வந்த லாரி ஒன்றைத் தடுத்து நிறுத்தி சோத னை செய்துள்ளார். அப்போது லாரிக் குள் 16 மாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாடு களை எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவற்றை கால்நடைச் சந்தையிலிருந்து விலைக்கு வாங்கிய தற்கான ஆவணங்களை இத்ரீஸ் பாஷா காண்பித்துள்ளார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட புனீத் கேரே ஹள்ளி கும்பல், இத்ரீஸ் பாஷா விடம் ரூ. 2 லட்சம் பணம் தரு மாறு கேட்டுள்ளனர். ஆனால், தங்களிடம் பணம் இல்லை என்றும் தரமுடியாது என்றும் இத்ரீஸ் பாஷா மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த புனீத் கேரேஹள்ளி கூட்டத்தினர், பாஷாவையும் உடனிருந்த இர்பான் மற்றும் ஓட்டுநர் சையத் ஜாகீர் ஆகியோரையும் கொடூரமாகத் தாக்கி, குற்று யிரும் குறையுயிருமாக ஆக்கி யுள்ளனர். பின்னர் காவல்துறையினரையும் வரவழைத்துள் ளனர். காவல்துறையினரும், சம்பவ இடத்திற்கு வந்து, புனீத் கொடுத்த புகாரின் பேரில், சையத் ஜாகீர் மற்றும் அவரோடு வந்த முஸ்லிம் இளைஞர்கள் மீதே, பசு மற்றும் கால்நடை வதைத் தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்துள்ளனர். சையத் ஜாகீருடன் இருந்த தாக கூறப்பட்ட இத்ரீஸ் பாஷா, இர்பான் ஆகியோரைத் தேடி யுள்ளனர். அதற்கு அவர்கள் தப்பியோடித் தலைமறைவாகி விட்டதாக ‘ராஷ்ட்ரா ரக்சனா படை’யைச் சேர்ந்த புனீத் கேரேஹள்ளி கூறியுள்ளார். இந்நிலையில்தான், மறுநாள் காலை சாத்தனூர் கிராமத்தின் சாலையோரத்தில், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இத்ரீஸ் பாஷாவின் உடல், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே நடந்த சம்பவம் தொடர்பாக பேட்டி அளித்த லாரி ஓட்டுநர் சையத் ஜாகீர், “நாங்கள் வழக்கமாக வார இறுதி நாட்களை கணக்கிட்டு கால்நடை களை தமிழ்நாடு, கேரளாவில் விற் பனை செய்வோம். வழக்கம் போல் வெள்ளிக்கிழமையும் 16 கால்நடைகளுடன் விற்பனைக் குப் புறப்பட்டோம்; அப்போது எங்களை வழி மறித்து தாக்கினர். என்னுடன் வந்த இத்ரீஸ் பாஷா, இர்பான் ஆகியோர் காவல்துறையினரை பார்த்த வுடன் பயந்து ஓடிவிட்டதாக நினைத்தேன். ஆனால் சனிக் கிழமை காலையில் இத்ரீஸ் பாஷாவின் ஒளிப்படத்தைக் காட்டி, அவர் இறந்து விட்ட தாக கூறிய பிறகே, உண்மை தெரியவந்தது’’ என தெரிவித்தார்.
இத்ரீஸின் குடும்பத்தினரும், அவர் அடித்துக் கொல்லப்பட் டதை அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சையத் ஜாகீர் அளித்த புகாரின் பேரில், ‘ராஷ்ட்ரா ரக்சனா படை’ யைச் சேர்ந்த புனீத் கேரேஹள்ளி உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் தற் போது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை யில் தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், இந்த சம்பவம் கருநாடகாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.