அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்!

1 Min Read

மதுரை, ஏப்.7- பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இதய வால்வு சுருக்கம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால், மாா்புப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்வதுதான் வழக்கமான முறை. ஆனால், வயது முதிா்ந்தவா்களுக்கும், நுரையீரல் பாதிப்பு உள்ளவா்களுக்கும் இந்த முறை பெரும் சவாலாகவும் ஆபத்தானதாகவும் அமையும். இத்தகைய சிக்கலான நிலையிலிருந்த நபா் பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ‘டிரான்ஸ்கேதீட்டா் அயோா்டிக் வால்வு இம்ப்ளாண்டேஷன் முறை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவா் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளாா்.

இந்த சிகிச்சையை மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர்களான அர்விந்த் ஜனார்த்தனன், ராகவன் கனகராஜன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்தனர். இதன் மூலம், அதிநவீன இருதய சிகிச்சை மய்யங்களில் ஒன்றாக பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை தன்னை நிலைநிறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *