சென்னை, மார்ச் 27 மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்கள் விரைவில் பூரண நலமடைய வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது “நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய சோனியா காந்தி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி யறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவர் விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார் என உறுதியாக நம்புகிறேன். சோனியா காந்தி அவர்கள் விரைவாகவும், முழுமையாகவும் நலம் பெற விழைகிறேன்.”இவ்வாறு முதலமைச்சர் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
வைரலாகும் பதிவு: கூட்டணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சரின் இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து நலம் விசாரித்து வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சோனியா காந்தி மருத்துவ மனையில் தற்போது உடல் நலம் தேறிவருவதாக ராகுல்காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்
