ராணிப்பேட்டை, மார்ச் 13- 8.3.2026 அன்று மாலை 5 மணி தொடங்கி இரவு 8.45 வரை உலக மகளிர் நாளை முன்னிட்டு, பெண்ணுரிமை மீட்ட – காத்த தந்தை பெரியார், அம்பேத்கர் எனும் தலைப்பில் ராணிப் பேட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
புளியங்கண்ணு கிராமத்தில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் புவனேஸ்வரிதேவராஜ் தலைமையில் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் சுசிலா வெங்கடேசன் முன் னிலையில் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட து.தலைவர் பொன்.வெங்கடேசன் தொடக்க உரையாற்றி நிகழ்வை ஒருங்கினைத்தார் தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் நோக்க உரையாற்றினார் மாவட்ட தலைவர் சு.லோகநாதன்.
தொடர்ந்து மாவட்ட ப.க.செயலாளர் ந.இராமு மகளிர் நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் சொ.ஜீவன்தாஸ், தி.க. சின்னதுரை, தமிழ்கனல், தியாகு, சிப்காட் ராஜாசார், க.சு.பெரியார்நேசன் ஆகியோரின் உரைக்குப் பிறகு மாநில மாணவர் கழக துணை செயலாளர் தேவ.நர்மதா சிறப்பாக உரையாற்றினார்.
இறுதியாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சு.தேவராஜ் நன்றி கூறியதோடு அனைவருக்கும் சிறப்பான இரவு உணவு அளித்தார்.மக்கள் பெருவாரியாக கலந்துகொண்டு பாராட் டிச் சென்றனர். குறிப்பாக பெண்கள் ஏராளமாக கலந்துகொண்டு சிறப்பித் தனர்.
