மாணவர் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புப் பயிற்சி: பள்ளி ஆசிரியர் பங்கேற்பு!
திருச்சி, மார்ச் 9- இன்றைய சூழலில் மாணவர்களின் கல்வியோடு சேர்த்து அவர்களின் ஒழுக்கப் பண்புகளையும் மேம்படுத்துவது அவசியமாகிறது.
இதனை முன்னிறுத்தி, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சார்பாக ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சியின் முக்கியத்துவம்:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இப்பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கப் பட்டது. மாணவர்களிடம் நற்பண்புகள், சமூகப் பொறுப்பு மற்றும் ஒழுக்க நெறிகளை எவ்வாறு பயனுள்ள முறையில் கொண்டு செல்வது என்பது குறித்து இதில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
ஆசிரியர் பங்கேற்பு:
இம்முகாமில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இளங்கலை ஆசிரியர், ம.இரத்தினசெல்வன் இப்பயிற்சியில் கலந்துகொண்டார்.
பயிற்சியின் நிறைவில், வெற்றிகரமாகப் பங்கேற்றதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.
பள்ளிக்குப் பெருமை:
இந்த முகாமில் கற்றுக்கொண்ட நுணுக்கங்களைப் பள்ளி மாணவர்களின் அன்றாடச் செயல்பாடுகளில் நடைமுறைப்படுத்தி, கல்விப் பணியோடு மாணவர்களின் வாழ்வியல் விழுமியங் களை வளர்க்கும் இத்தகைய அரசுப் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியர் இரத்தின செல்வன் அவர்களைப் பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் சக ஆசிரியர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
