சென்னை, மார்ச்.5 தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) விதிகளில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:அரசு ஊழியர்கள் தங்களது பொது வருங்கால வைப்பு நிதி விதிகளின் கீழ் (விதி 15A), குறிப்பிட்ட காரணங்களுக்காக முன்பணம் பெறும்போது கீழ்க்கண்ட நிபந்தனைகள் பின்பற்றப்படும்: அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரை முன்பணம் பெறலாம்.அல்லது, ஊழியரின் மாதாந்திர ஊதியத்தைப் போல 75 மடங்கு தொகை.மேலே குறிப்பிட்ட இந்த இரண்டில் எது குறைவான தொகையோ, அதுவே முன்பணமாக வழங்கப்படும்.வீடு கட்டும் கடனுக்கான கட்டுப்பாடுகள்: வீடு கட்டும் நோக்கத்திற்காக முன்பணம் பெறும் சந்தாதாரர்களுக்கு புதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: மாநில அரசு, ஒன்றிய அரசு அல்லது பொது/தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடன் தொகையுடன் சேர்த்து, GPF முன்பணமும் பெறப்படும் பட்சத்தில், மொத்தத் தொகை ரூ. 50 லட்சத்தைத் தாண்டக்கூடாது. அதாவது, அனைத்து நிதி ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மொத்த நிதி உதவி ரூ. 50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என திருத்தப்பட்ட துணை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
