“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு” அமைச்சர் கே.என்.நேரு

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, நவ. 5- சென்னை, ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

“சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 11 செ.மீ மழை பெய்தது. இருந்தாலும், தேங்கியிருந்த மழை நீர் அனைத் தும் ஒருமணி நேரத்தில் வடிந்துவிட்டது. மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இரண்டு சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது.

எங்கு மழைநீர் தேங்கினாலும், அதனை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மிக கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மரம் சாய்ந்து விழுந்தாலோ, மழை நீர் தேங்கினாலோ, அதனை அப்புறப்படுத்துவதற்கு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.” இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *