ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 13.4.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* டில்லியில் ராகுல் காந்தியுடன் நிதிஷ்குமார், தேஜஸ்வி ஆகியோர் சந்திப்பு. வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தலைமையிலான நீதிபதி எஸ்.கே.கவுல், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களின் தாழ்த்தப்பட்ட சமூக தகுதி கோரிய மனுக்களை விசாரிக்கும் போது மதக் கட்டமைப்பில் ஜாதியை அங்கீகரிக்காத கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களுக்கு ஜாதியைக் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

 தி டெலிகிராப்:

* தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021இல், பொய் செய்திகள் என்ற பெயரில் தடை விதிக்கும் விரிவான அதிகாரத்தை அரசுக்கு அளிப்பதாக இந்திய செய்தித்தாள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

* கருநாடகாவின் பந்திப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் சஃபாரியின் போது ஒரு புலியைக் கூட காண முடியவில்லை என்று கருத்துகள் வெளிவந்ததை அடுத்து சமூக ஊடகங்கள் மோடியின் பயணத்தை கிண்டல் செய்துள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அரசின் நிறைவேற்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் கடத்தும் ஆளுநர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *