சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மத்தை ஏற்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்

Viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அழைப்பு

அரசியல்

சென்னை,  ஏப்.  15– சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல் களையும் ஏற்கும் சக்திகள், இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஒன்றுசேர வேண் டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அழைப்புவிடுத்தார்.

திமுகசார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதா வது: இது திமுக இப்தார்நிகழ்ச்சி மட்டுமல்ல; அனைத்து இஸ்லாமிய மக்களின்விழாவாக இது அமைந் துள்ளது. இதில் கட்சிபேதமில்லை; 

அனைத்து மதநம்பிக்கையாளர் களும் அழைக்கப்படுவதால், இதில்மத வேறுபாடுகளும் கிடையாது. ஒற்று மையை வலிமைப்படுத்தும் விழாவாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அடக்கம், இரக்கம், அன்பு, ஈகைஆகியஅருங்குணங்கள்தான்திருக்குரானில்அதிகம்சொல்லப்பட்டுள்ளது. 

திமுக முதலில் எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அப்போதிலிருந்தே சிறு பான்மையினருக்காகபல்வேறுதிட்டங்கள்உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

மிலாதுநபிக்குஅரசுவிடுமுறைஅறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அதனை ரத்து செய்தது.

கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் மீலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார். சிறுபான்மையினர் நலவாரி யம், உருது அகடாமி தொடங்கியதும், 3.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு உரு வாக்கியதும் கலைஞர் என சொல்லிக் கொண்டேபோகலாம். முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் தற்போதுதிர £வி டம £டல்ஆட்சிநடைபெற்றுவருகிறது. 

இந்த ஆட்சிஅமைந்ததும் சிறுபான் மையினர்ஆ ணையம்அமைக்கப்பட்டு உள்ளது. வக்பு சொத்துகளை பாது காக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள், கோரிக்கை வைக்காமல் செய்து கொடுத்துள்ளோம். 

திராவிடக் கொள்கைகள்: 

சட்டப்பேரவையில்   சிறுபான்மை நலத்துறைசார்பில்மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது துறை அமைச்சர்மஸ்தான், பலமுக்கியஅறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.

கோரிக்கை வைக்காமல் செய்யும் இந்த அரசு கோரிக்கை விடுத்தும் செய் யாமல் விட்டுவிடுமா? 

உறுதியாக சொல்கிறேன் இது திராவிட மாடல் அரசு, முத்தமிழர் அறிஞர் கலைஞர் வழியில்செயல்படும் உங்களுக்காக செயல்படும் அரசு. அனைத்து தரப்பினரையும் உள்ளடக் கிய அரசாக இந்தஅரசு செயல்பட்டு வருகிறது. இன்றுஇந்த திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவுவதைபார்க்கிறோம். இந்தியா வைகாப்பாற்றும்ஆற்றல்சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய வற்றுக்குதான்உள்ளது. இந்தமூன்று கருத்துகளையும் ஏற்கும் ஜனநாயக சக்திகள்நாடு முழுவதும் ஒன்று சேர வேண்டும். இந்த ஒற்றுமையானது தேர் தலுக்காகமட்டுமல்ல; இந்தியாவின் எதிர்காலத்துக்காகவும் ஏற்படவேண் டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார். 

இந்தநிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆசடி சா.மு.நாசர், செஞ்சிமஸ்தான், தமிழ்நாடு பிற்படுத் தப்பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக்கழகத்தின் தலைவர் துறை முகம் காஜா, வீட்டுவசதிவாரிய தலை வர் பூச்சிஎஸ்.முருகன், மனிதநேய மக் கள்கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் முகமதுஅபுபக்கர், வக்புவாரிய தலை வர் அப்துல்ரகுமான், அரசுதலைமை காஜிக்கள் சலாவுதீன் முகமதுஅயூப், குலாம்முகமதுமெஹ்திகான் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *