கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 18.2.2026

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாடு உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு, மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என தகவல்.

* வெளியில் யாரும் பேசக்கூடாது: கூட்டணி குறித்து தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும்; காங்கிரஸ் மேலிடம் வாய்ப் பூட்டு.  திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் தொடர்கிறது. 2ஆம் கட்ட தலைவர்களின் கருத்து கட்சியின் கருத்தல்ல. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.

* விமான விபத்தில் அஜித் பவார் மரணம், சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் மனைவியும் துணை முதலமைச்சருமான சுனேத்ரா பவார் கோரிக்கை.

* தமிழ்நாட்டின் ஜி.டி.பி., இந்திய சராசரி ஜிடிபியை விட அதிகம்; தமிழ்நாடு பட்ஜெட் குறித்த ஆய்வில் தகவல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் 62 இமெயில், 14 சந்திப்புக்கள்: பாஜக அமைச்சர் ஹர்தீப் பூரி விளக்கமளிக்க காங். வலியுறுத்தல்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மத்திய பிரதேசம்: ஜல்னா மாவட்டத்தின் தலேகான் கிராமத்தில் தங்கள் குடும்பத்தில் திருமண விருந்துக்கு ஆடுகள் வெட்டப்பட்டதை அடுத்து, “மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக” அய்ந்து முஸ்லிம்கள் மீது மத்தியப் பிரதேச காவல்துறை எப்.ஆர்.ஆர் பதிவு.

தி இந்து:

* கண்காட்சியாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு; ஏஅய் தாக்க மாநாட்டில் ஏற்பாடுகள் மோசம்: லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது, பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

* ‘‘இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் ஏஅய் திறன்களை நிரூபிக்கும் ஒரு கண்காட்சி ஏஅய் உச்சிமாநாடு. ஆனால் இந்த விளம்பர பசியுள்ள ஒன்றிய அரசு முழுமையான குழப்பமாகவும் தவறான நிகழ்ச்சி ஏற்பாட்டாகவும் மாற்றி இருக்கிறது என மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்.

தி டெலிகிராப்:

* ஜாதி பாகுபாடு கோரிக்கைகள் மீதான போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்த டில்லி பல்கலைக்கழகம் தடை; “ஜனநாயக விரோதமானது” என்றும் “பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்புகள், மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பாஜகவின் உத்தரவின் பேரில் செயல்படும் ‘துக்ளக் கமிஷன்’: தேர்தல் ஆணையத்தின் மீது மம்தா கடும் விமர்சனம். பாஜக அய்டி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி “வங்காளத்தில் லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீக்கியுள்ளார்” என குற்றச்சாட்டு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *