அண்ணாமலையால் குற்றத்தை நிரூபிக்க முடியுமா? – வைகோ கேள்வி

Viduthalai
1 Min Read

அரசியல்

கரூர், ஏப். 17- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது என குளித்தலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். கரூர் மாவட்டம், குளித்தலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆளுநர் முதல் நாள் ஒன்று சொல்கிறார் மறுநாள் அதை மறுத்து பேசுகிறார். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேச வேண்டிய நிலைமை ஆளுநருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்துவிடலாம் என்று பேச வேண்டிய நிலைமை ஆளுநருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்துவிடலாம் என்று பேச ஆரம்பித்தவர் கடைசியில் இந்தியால் தமிழை ஒன்றும் செய்து விட முடியாது என்று பேசுகிற நிலைமைக்கு வந்திருக்கிறார்.  அதுபோல பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஒன்று பேசுகிறார் யாரைப் பற்றி பேசுகிறார் என தெரியவில்லை.

அவரால் எதையும் நிரூபிக்க முடியாது.  தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட மிட்டு பணியாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுக்குழு முடிந்த பின்பு எனது திட்டம் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *