பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை. நவ.6 – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு இன்று (6.11.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: 

நடப்புக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள் ளது. 

இந்த தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்ய ஆகஸ்ட் 10 முதல் 21ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. 

தற்போது தேர்வர்களின் நலன் கருதி செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய மீண்டும் மறுவாய்ப்பு வழங் கப்படுகிறது.

இதையடுத்து அனைத்து தனித் தேர்வர்களும் இன்று (நவம்பர் 6) முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நேரில்சென்று தங்களின் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

அப்போது வழங்கப்படும் ஒப் புகைச் சீட்டை பத்திரமாக வைத் துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எழுத்துத் தேர்வுக்கான பதிவு தொடங்கும்போது தனித் தேர்வர்கள் இந்த ஒப்புகைச்சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல் களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், பதிவு செய்த பின்னர் சேவை மய்யத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில்உள்ள விண் ணப்ப எண்ணை பயன்படுத்தியே நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *