குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டக் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் கழகக் கொடியேற்று விழா

0 Min Read

அரசியல்

குமரி மாவட்ட கழகம் சார்பாக வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டக்  கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் கழகக்  கொடியேற்று விழா நடைபெற்றது. மாவ‌ட்டத்  தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி கழகக் கொடியினை ஏற்றினார். மாவட்டச்  செயலாளர்   கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான் சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளர் பெரியார் தாஸ் , தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், இரா.முகிலன்   மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *