வரலாற்றைத் திருத்தும் திருடர்கள் !

2 Min Read

இந்திய வரலாற்று காங்கிரஸ்  (Indian History Congress ) சமீபத்திய அறிக்கையில் – தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) தனது புதிய பாடத் திட்டத்தில் வரலாற்றைத் திருத்தி, மாற்றி அமைத்துள்ளதை கண்டித்தும், இச்செயலுக்கு எதி ராக வரலாற்று அறிஞர்கள் குரல் எழுப்ப வேண்டு மென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(ஆதாரம் : ‘தி இந்து’ – 11.04.2023) 

ஆர்.எஸ்.எஸ். சங்கிகளின் முக்கியமான திட்டமே –  வரலாற்றைத் திருத்தி தங்களது ஆரிய பார்ப்பனிய நலனுக்கு ஏற்றவாறு எழுதி வைத்து விட வேண்டும் என்ற மாஸ்டர் பிளான் தான். அதற்காக அவர்கள் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள் ! 

அவ்வாறு செய்ய தீர்மானித்திருக்கும் வரலாற்று பாடத்திட்டத்தில் உள்ள திருத்தங்களை / திரிபுகளை படித்தறியுங்கள் :

1)   இந்திய நாடு ஆரியர்களின் தாய் நாடு என்ற பெருமையைக் கொண்டதாகும் – 

இந்த திருத்தத்தின் மூலம், ‘ஆரியர்கள் வந்தேறிகள் ‘ என்ற வரலாற்று உண்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதும், திராவிடர்களின் சிந்து வெளி நாகரிக வரலாற்றை தங்களுக்கு சாதகமாக மாற்றி வைத்து ‘ சரஸ்வதி நாகரிகம் ‘ என அழைத்துக் கொள்ள செய்வதுமாகும் !

2)   பண்டைய இந்திய (Ancient History) வரலாற்றிலிருந்து ஜாதி அமைப்பு பற்றிய தகவல்களை நீக்கி விடுவது – இதன் மூலம் ஜாதியை இன்று வரை கட்டிக் காத்து வரும் பண்டைய மனுதர்ம சாஸ்திரத்தின் மேலுள்ள எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்வதாகும் !

3)   இந்தியாவில் ஜாதி அமைப்புகள் இங்கே இஸ்லாம் மதம் வந்த பின்பு தான் உருவானதாக சித்தரிப்பது – இந்த வரலாற்று திரிபு மூலம் ஜாதி சண்டைகளுக்கு காரணம் இஸ்லாம் என பதிய வைத்து அதனால் மதச் சண்டைகளுக்கு வழி வகுப்பதாகும் !

4)   முகலாயப் பேரரசர் அக்பரின் மத நல்லிணக்கம் பற்றிய தகவல்களை நீக்கி விடுவது – 

இதனால் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கலாச்சார, பண்பாட்டு ஒற்றுமைகளையும் முன்னேற்றங்களையும் மாணவர்களிடம் இருட் டடிப்பு செய்வதாகும் !

5)  காந்தியார் கொலை சம்பந்தமான நிகழ்வுகளை எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் (tக்ஷீவீயீறீமீபீ) பதிவிடுவது – 

இதன் உள் நோக்கம் காந்தியாரின் கொலை தவிர்க்க முடியாத ஒன்று போலவும் அதில் சம்பந்தப்பட்டவர்களை துதி பாடுவதும் சகஜமானது தான் என்ற நிலைப் பாட்டை எடுப்பதுமாகும் !

வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தும் திருடர்களை, இப்படிப்பட்ட திரிபுகளைச் செய்யும் திருந்தாத திருடர்களை அடையாளம் கண்டு மக்களிடம் தெரி விக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் ! 

வரலாறு மிகவும் முக்கியமென அவர்களுக்கு தெரிந்த அளவிற்கு நமக்கும் தெரிய வேண்டுமல்லவா?

– பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர் 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *