குறைந்த எடையில் உறுதியான சுவர்

1 Min Read

அரசியல்

ஏற்கெனவே முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் கட்டடம் கட்டுவது சிக்கனமா னது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்டட ‘3டி பிரின்டர்’கள், இரும்பு, மணல், சிமெண்ட் போன்ற பல கட்டுமானப் பொருட்கள் குறைவாகப் பயன்படுத்தியே கட்டடங்களை கட்டுகின்றன. இப்போது அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் இன்னொரு படி மேலே சென்றுள்ளனர்.

அவர்கள் உருவாக்கியுள்ள புதிய முப்பரிமாண அச்சு முறைப்படி, சுவர் களை விரும்பிய வடிவில் கட்ட முடியும். அதுமட்டுமல்ல, சுவரின் எடை 72 சத வீதம் வரை குறைவாக இருக்கும். அதே நேரம், அந்த சுவர்களின் உறுதித்தன்மை, வழக்கமாக சிமென்டால் இழைத்துக் கட்டப்படும் சுவர்களுக்கு இணையாக இருப்பதாக மிச்சிகன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

சுவர்களுக்கு எங்கே எடை அதிகம், எங்கே குறைவு என்பதை ஒரு கணினி மாதிரியில் சோதித்து, அந்தக் குறிப்புகளை கட்டடம் கட்டும் முப்பரிமாண அச்சியந் திரத்திடம் கொடுத்தால் போதும். வடிவ அழகோடு, எடை குறைவாகவும், உறுதி குறையாமலும் சுவர்களை கட்டித் தருகிறது. 

அப்படியென்றால், கட்டுமான செல வில் 72 சதவீதம் குறைந்துவிடுமா? இந்த அச்சியந்திரம் எப்போ இந்தியாவுக்கு வரும்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *