சென்னை, ஜன.26- மகளிர் சுய உதவி குழு கடனைத் தள்ளுபடி செய்ததால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்பட்ட 194 கோடி ரூபாய் வட்டி இழப்பை, தற்போது தமிழ்நாடு அரசு விடுவித் துள்ளது.
கடந்த 2021 வரை, தமிழ் நாட்டிலுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், பெண்களுக்கு சிறு தொழில், வருமானம் உருவாக்க, மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உதவியாக அரசு மற்றும் வங்கிகள் கடன் வழங்கி வந்தன.
இந்த கடன்கள் பெரும்பாலும் குறைந்த வட்டி அல்லது எளி மையான விதிகளிலேயே வழங்கப் பட்டன. ஆனால் சில குடும்பங்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் இந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கலில் தவித்தார்கள். பல பெண்கள் மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்.
அப்போதுதான் 2021 சட்ட மன்றத் தேர்தல் நேரமும் வந்தது. பெண்களின் வேதனையை உணர்ந்த திமுக, “கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தது.
கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி
அத்துடன் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படியே, 2021 வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த 2,117 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது… இதனால், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில், 10.56 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதுமட்டுமல்ல, இதன் மூலம் கடன் சுமையால் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறைக்கப்பட வேண்டும், அவர்களுக்கு நிதி சுதந்திரம் கிடைத்து, புதிய தொழில்களை தொடங்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அரசு அப்போது கூறியது..
மகிழ்ச்சியில் மகளிர் குழுக்கள்
அரசின் இந்த தள்ளுபடியில், கடனை செலுத்த முடியாத பெண்கள் குழுக்கள் மீதமுள்ள கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டனர். இதனால் பெண்கள் குழுக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் புதிய உற்பத்தி, வணிக முயற்சிகளில் இறங்கும் அளவுக்கு, அரசின் அந்த அறிவிப்பு தெம்பை தந்திருந்தது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியில், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில் சேர்ந்த 10.56 லட்சம் பெண்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த தள்ளுபடியாகிய நிதியை, அரசு 2021-22 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 600 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு வழங்கியது.
மீதமுள்ள தொகையை மொத்தமாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு விடுவித்தது. இதற்குப் பொறுப்பாக வட்டி வசதி கொடுக்கப் படவில்லை.
தமிழக அரசு அசத்தல்
இதையடுத்து, கூட்டுறவு துறை, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைக்கு தொடர்பான 194 கோடி ரூபாய் வட்டியை அரசிடம் வழங்குமாறு வலியுறுத்தியது. இந்த வலியுறுத்தலுக்கு பிறகு, அந்த நிதியை அரசு இந்த மாதம் 20ஆம் தேதி விடுவித்துள்ளது. இதன் மூலம், மகளிர் குழுக்கள் மீண்டும் கடன் சுமையில்லாமல் தங்கள் சொந்த தொழில்கள் மற்றும் சமூக முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு பெற்றுள்ளன.
