சென்னை, ஜன 25 “சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் திமுக போராடும்” என தமிழ்நாடு முதல மைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளம், இப்போது கரு நாடகா. இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது. மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.
நான் முன்பே தெரிவித்தபடி, சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும்.
இந்தியா முழுவதும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்தப் பயனற்ற, நடைமுறைக்குப் பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.அய்.ஆரின் பெயரில் குஜராத்தில் நடைபெறுவது
நிர்வாகப் பணி அல்ல; திட்டமிட்ட வாக்குத் திருட்டு
ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜன.25 எஸ்.அய்.ஆரின் பெயரில் குஜராத்தில் நடைபெறுவது நிர்வாகப் பணி அல்ல; திட்டமிட்ட வாக்குத் திருட்டு என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எங்கெல்லாம் எஸ்.அய்.ஆர். பணிகள் நடக்கிறதோ, அங்கெல்லாம் வாக்கு திருட்டு நடந்துவருகிறது என குஜராத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் சில நாட்களில் 12 லட்சம் ஆட்சேபனைகள் வந்த நிலையில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது சமூக வலைதள பதிவில்:
குஜராத்தில் எஸ்.அய்.ஆர். என்ற பெயரில் செய்யப்படு வது எந்த வகையான நிர்வாக செயல்முறையும் அல்ல – இது திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் மூலோபாய வாக்கு திருட்டு. மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆபத்தான விடயம் என்னவென்றால், ஆயிரக்க ணக்கான ஆட்சேபனைகள் ஒரே பெயரில் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில், குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச்சாவ டிகளின் வாக்குகள் வெட்டப்பட்டன. பாஜக தோல்வியைக் காணும் இடங்களில், வாக்காளர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள். இந்த முறை ஆலந்தில் காணப்பட்டது. ராஜுராவில் இதுதான் நடந்தது. இப்போது குஜராத், ராஜஸ்தான் மற்றும் எஸ்.அய்.ஆர். திணிக்கப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அதே வரைபடம் செயல்படுத்தப்படுகிறது.
‘‘ஒரு நபர், ஒரு வாக்கு’’ என்ற அரசியலமைப்பு உரிமையை ஒழிப்பதற்கான ஒரு ஆயுதமாக எஸ்.அய்.ஆர். மாற்றப்பட்டுள்ளது – இதனால் மக்கள் அல்ல, பாஜக யார் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. மேலும் மிகவும் தீவிரமான உண்மை என்னவென்றால், தேர்தல் ஆணையம் இனி ஜனநாயகத்தின் பாதுகாவலர் அல்ல, ஆனால் இந்த வாக்கு திருட்டு சதியில் முக்கிய பங்காளியாக மாறியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
