அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அ.தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜ.ன.23 போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை . இருபத்து மூன்று ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளோம் . அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் நேற்று (22.1.2026) எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது : அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டு இருப்பதை மிகுந்த கவலையோடு, வருத்தத்தோடு, அக்கறையோடு நம்முடைய அமைச்சர் எதிர் கொண்டு இருக்கிறார் . இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?

அரசு ஊழியர்கள் ஏதாவது கோரிக்கை வைத்துப் போராடுவது அவர்களின் உரிமை. ஆனால் உரிமையோடு போரா டக் கூடிய போராட்டத்தைக்கூட முடிக்க வேண்டும், தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு தொடர்ந்து பல முறை அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. முழுமையாக தீர்க்கவில்லை என்று சொன்னாலும், தொண்ணூற்றைந்து சதவீதம் தீர்த்து வைத்து இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை. கொண்டு போய் சிறையில் அடைக்கவில்லை. கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்தது. எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை. நமது எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த போது அரசு ஊழியர்களை அதிக ஊதியம் வாங்கிக் கொண்டு இருப்பதாக கொச்சைப்படுத்தி பேசியதை இந்த நாடு மறந்தவிடவில்லை என்பதையும் உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இருபத்து மூன்று ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்துவைத்துள்ளோம்; அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *