தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியாதது ஏன்? – கனிமொழி எம்.பி. விளக்கம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒசூர், ஜன. 20– கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 101 வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசால் நிறைவேற்ற முடியாதது ஏன் என்பது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

வாக்குறுதி

ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழி தலைமையிலான 12 பேர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கங்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

கடந்த தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். ஒன்றிய அரசு ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு அரசுக்கு இடைஞ்சல் செய்து வருகிறது.

ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வழங்காததால் 101 வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. இதற்கு இடையிலும் தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக உருவாக்கி வருகிறோம். ஒன்றிய அரசு, ‘ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது’ என தெரிவித்து வருகிறது. ஆனால், “முடியாததை முடித்துக்காட்டும் திமுக அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்கும்” என அமைச்சர் டிஆர்பி ராஜா இங்கு தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தல் வாக்குறுதியில் மீதமுள்ள 101 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும். அதனை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற நம்பிக்கையில் உங்களை சந்திக்க நாங்கள் வந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

மகளிர் உரிமைத் திட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவினர் ஏற்கெனவே அறிவித்த தேர்தல் அறிக்கையை மீண்டும் அறிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் திட்டம் என அறிவித்தார். இது பெண்கள் முன்னேற்றத்திற்காகக் கொண்டு வந்த திட்டம். ஆனால் அதிமுக குலவிளக்குத் திட்டம் என தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பெண்களை எங்கு போய் நிறுத்த உள்ளார்களோ எனத் தெரிவில்லை.

அதிமுக தற்போது அறிவித்துள்ள பெண்களுக்கு இருசக்கர வாகனத் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவித்துவிட்டு கிடப்பில் போட்டு பின்னர் பிரதமரை அழைத்து வந்து அறிமுகப்படுத்திய திட்டம். அந்த திட்டத்தை தெரியாமல் மறந்து தற்போது அறிவித்துள்ளார்கள்.

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக சார்பில் ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு குரல் எழுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், மேயர் சத்யா, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *