பக்தி என்ற பெயரில் ‘மாங்கல்ய பிச்சையாம்’ அரங்கேறும் ஏமாற்று வேலை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தேனி, ஜன.18 தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில், மக்களின்  முடநம்பிக்கையைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்கள் சிலர் நூதன முறையில் பிச்சை எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள் ஆடை அணிந்து

உத்தமபாளையத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி சமீபத்தில் சில இளம் பெண்கள் வந்தனர். மஞ்சள் ஆடை அணிந்து, நெற்றி நிறைய விபூதி, குங்குமம் தரித்து, கையில் வேப்பிலையுடன் கூடிய தட்டு ஏந்தி அம்மன் பக்தர்கள் போல அவர்கள் காட்சியளித்தனர்.

வங்கி ஊழியர்களிடம் பேசிய அவர்கள், தங்களுக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகவில்லை என்றும், அந்த ‘மாங்கல்ய தோஷம்’ நீங்க அம்மன் அருளால் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்துப் பரிகாரம் செய்வதாகவும் உருக்கமாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட பலரும் பரிதாபப்பட்டு தாராளமாகப் பணம் கொடுத்துள்ளனர்.

அதிநவீன ஆடைகளுடன்…

அன்று மாலை வங்கிப் பணி முடிந்து ஊழியர்கள் பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது, காலையில் பக்தி வேடத்தில் வந்த அதே பெண்கள், மாலையில் அதிநவீன உடைகளுடன், நாகரிகமாக அலங்காரம் செய்துகொண்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் ஊருக்கு வெளியே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர்.

பகலில் பக்தி வேடமிட்டுத் திட்டமிட்டு ஆளுக்கொரு பகுதியாகப் பிரிந்து பிச்சை எடுப்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருகின்றனர்.

மக்களின் சென்டிமென்ட் மற்றும் தெய்வ நம்பிக்கையை மூலதனமாக்கி இவர்கள் இந்த நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர்.

தெய்வத்தின் பெயரால் வரும் இது போன்ற போலி நபர்களை அடையாளம் கண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உழைத்து வாழ வழியிருந்தும், பக்தியைப் பகடைக்காயாக்கி ஏமாற்றுபவர்களின் வலையில் விழ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *