தஞ்சையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு கம்யூ. கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

Viduthalai
1 Min Read

தஞ்சாவூர், ஏப். 25-  இந்திய அர சமைப்புச் சட்டத்திற்கு எதி ராகவும் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புக ளின் முகவராகவும், தமிழ் நாட்டு மக்களின் நல னுக்கு எதிராகவும்  செயல் பட்டுக் கொண்டு, மார்க் சியத்தை அவதூறாக வும் பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சைக்கு வருவதை (24.4.2023) கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  

ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்தி ராபதி, வடக்கு மாவட் டச் செயலாளர் மு.அ. பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர்.  

இதில் சிபிஎம் மாவட் டச் செயற்குழு உறுப்பி னர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், கே.பக் கிரிசாமி, சி. ஜெயபால், பி.செந்தில் குமார், என். வி.கண்ணன், எஸ்.தமிழ் செல்வி, என். சுரேஷ் குமார், கே.அருளர சன், எம்.செல்வம், என்.சிவ குரு, ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன், மாநகர செயலாளர் எம்.வடி வேலன், சிஅய் டியு கே. அன்பு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏஅய் டியுசி ஆர்.தில்லை வனம், வீர மோகன், ஆர். செந்தில் குமார், கோ.சக்தி வேல், கு. சேவையா, மாவட்ட நிர்வாகிகள் துரை.பன்னீர்செல்வம், ஆர்.கே.செல்வகுமார், ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் பிரபாகர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயலட் சுமி, கண்ணகி, தாமரைச் செல்வி, சிபிஅய் ஒன்  றியச் செயலாளர் ஜார்ஜ்  துரை, உள்ளிட்ட நூற் றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து   கொண்டவர்களை காவல் துறையினர் உட னடியாக கைது செய்து தனியார் திரு மண மண் டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *