ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.5- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து, அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு

டெட் (TET- Teachers Eligibility Test) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் ஒன்றிய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் தகுதி பெறுவோர் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர முடியும்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த 470 ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு நிதி யுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பள்ளி நிர்வாகங்களால் நியமிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் 470 ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி உள்ளிட்ட இதர விவரங்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னர் தொடர்புடைய அதிகாரம் பெற்ற அலுவலர்களால் நியமன ஏற்பு வழங்கல் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞரிடமிருந்து பெறப்பட்ட சட்டக் கருத்தின் அடிப்படையிலும், 13.12.2023 ஆம் தேதிக்கு முன்னர் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு நியமன ஒப்புதல் அளிக்க கோரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றும் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை மூலம் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த 316 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 154 ஆசிரியர் களுக்கும் என மொத்தமாக 470 ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *