சமூக நீதித் துறையில் திராவிட மாடல் அரசின் புரட்சி ஆதிதிராவிடர் பழங்குடி மாணவர்கள் பிஎச்டி படிக்க ரூபாய் ஒரு லட்சம் ஊக்கத்தொகை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 2- தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு (பிஎச்.டி) படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நடப்பு (2025-2026) கல்வி ஆண்டில் இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கும், ஏற்கெனவே ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் அதை புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர பிஎச்.டி பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களாக இருக்க வேண்டும்.முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வயது வரம்பு 50, மாணவிகளுக்கு 55 ஆக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை adwphdscholarship.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்தை துறைத் தலைவர் மற்றும் பல்கலை. பதிவாளரின் பரிந்துரையுடன், ‘ஆணையர்,ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை – 5’ என்ற முகவரிக்கு ஜன.31-க்குள் அனுப்ப வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *