புதுடில்லி, ஏப்.28 – 2018ஆம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் ராவ் குறித்து துக்ளக் குருமூர்த்தி பதிவிட்ட கருத்துக்கு எதிராக வழக்குரைஞர்கள் சங்கம் தொடர்ந்த கிரிமினல் அவமதிப்பு வழக்கில், துக்ளக் குரு மூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக துக்ளக் குருமூர்த்தி ஏற்கெனவே மன் னிப்பு கோரி, தனது பதிவையும் நீக்கிவிட்டார் என அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் 27.4.2023 அன்று வாதிட்ட நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.