பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் நினைவு நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சை, டிச. 26- தஞ்சை பழைய பேரூந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாள் (24.12.2025) முன்னிட்டு பல்கலைக்கழக நுழைவு வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா வெ.இராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதிய பேரூந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா இரா. மல்லிகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வல்லத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக் கழக முதன்மையர் கட்டட எழிற்கலைத் துறை பேரா சி.வி.சுப்ரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *