திருச்செந்தூர் – தோப்பூரில் – சுயமரியாதை நாள் விழா வாழ்வியல் சிந்தனைகள் பாகம் – 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் – உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? நூல்கள் வெளியீடு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தோப்பூர், டிச. 16- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – தோப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா, வாழ்வியல் சிந்தனைகள் பாகம் – 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் – உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? நூல்கள் வெளியீடு 15.12.2025 அன்று மாலை ஆறுமணிக்கு திருச்செந்தூர் ஒன்றியம் தோப்பூர் சேகுவாரா குடிலில் எழுச்சியோடு நடைபெற்றது.
ஒன்றிய கழகத்தலைவர் து.கவுசிக் வரவேற்று உரையாற்றினார். கழகக் காப்பாளர் மா.பால்இராசேந்திரம் தலைமை வகித்து ஆசிரியர் அவர்களின் பேராற்றலை விளக்கி உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவு ரையாற்றினார். நூல்களை வெளியிட்டு விசிக வின் மேனாள் மண்டல செயலாளர் சுயமரியாதை வீரர் சொ.சு.தமிழினியன் தமிழர் தலைவர் அவர்களின் பண்புநலன்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் தேவ.நர்மதா தந்தை பெரியார், தமிழர் தலைவர், அன்னை மணியம்மையார் ஆகியோரின் தொண்டறத்தை விளக்கி உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கோ.முருகன் ,மாவட்டப.க.செயலாளர் திருவைசொ.பொன்ராஜ், திமுக கலை இலக்கிய அணி மோ.அன்பழகன், தூத்துக்குடி மாநகரதலைவர்த.பெரியார் தாசன், கி.கோபால்சாமி, தோப்பூர் கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *