‘நீட்’ தேர்வால் அச்சம்: மாணவி தற்கொலை முயற்சி

2 Min Read

அரசியல்

கோவை, மே 2– தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் மனிஷா (வயது 18). இவர் கோவை போத்தனூரில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மருத்துவராக வேண்டும் என்பது இவருடைய கனவாகும். இதற்காக கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு அவர் தேர்வை எழுதினார். அதில் அவர் போதிய மதிப்பெண் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து மனிஷாவுக்கு செவிலியர் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் செவிலியருக்குப் படித்துக் கொண்டே மீண்டும் நீட் தேர்வை எழுத தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்தார்.

தற்கொலைக்கு முயற்சி

தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு அவர் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. மனிஷாவுக்கு நெல்லை மாவட்டத்தில் தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு தயாராகி மனிஷா, இந்த முறையும் தனக்கு நல்ல மதிப்பெண் கிடைக்குமா? மருத்துவராகும் கனவு நிறைவேறுமா? என மிகுந்த மன குழப்பத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் நீட் தேர்வு குறித்து ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதியில் இருந்த மாணவி நள்ளிரவு 1 மணியளவில் திடீரென பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருடைய கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அவர் வலியால் துடித்தார்.

பரபரப்பு

சத்தம் கேட்டு எழுந்த சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வுக்கு பயந்து செவிலியர் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, தற்கொலைக்கு முயன்ற மாணவி பிளேடால் கையை அறுக்கும் போது தோல் பகுதியில் மட்டுமே பிளேடு வெட்டுப் பட்டு உள்ளது.

இதனால் அவருடைய உயிருக்கு பெரிதும் பாதிப்பு இல்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *