சர்க்கரை அளவு குறைய என்ன காரணம்?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

« நீரிழிவில் சர்க்கரை அளவு உயர்வு மட்டுமே பிரச்சினைக்குரியது அல்ல. ரத்தச் சர்க்கரை குறையும் (Low sugar) என்பதும் கவனமாக கையாளப்பட வேண்டும்.

« தாழ்நிலைச் சர்க்கரை என்று சொல்லப்படும் இந்தப் பிரச்சினை கொண்டவர்களை சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

« சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, அளவுக்கு அதிகமான இன்சுலின் அல்லது நீரிழிவு நோய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, வேலைப்பளு, வலி நிவாரணி மாத்திரைகள், மது அருந்துதல் போன்ற காரணங்களால் சர்க்கரை அளவு குறையலாம்.

« உடலின் சர்க்கரையின் அளவு தோராயமாக 140 mg/dL என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவானது 70 mg/DL என்பதற்கும் கீழே குறைவதையே (Low Sugar) என்கிறோம்.

« இதை மருத்துவ ரீதியாக (Hypoglycemia) என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

« ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது போலவே குறைவதும் அதிக தீமையை விளைவிக்கும்.

« அதிகமான பசி, வியர்வை, பலவீனம், படபடப்பு, நடுக்கம், அமைதியின்மை, எரிச்சல் அல்லது கிடுகிடுப்பு, வாந்தி தலைவலி, பார்வையால் பாதிப்பு, மயக்கம், குழப்பம், வலிப்பு நோய் போன்ற தொல்லைகள் திடீரென்று எற்படுதல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்.

« மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது தெரிந்தால் உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். தாழ்நிலை சர்க்கரைக்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

« தாழ்நிலைச் சர்க்கரை தொடர்ந்து நீடித்தால் மூளையை நிரந்தரமாக பாதித்துவிடும். அடிக்கடி இந்நிலை ஏற்பட்டாலும் இது மனநிலையை வெகுவாகப் பாதிக்கும்.

அறிவுரைகள்

« லோ சுகர் என்பதை உணர்ந்தால் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்க வேண்டும். குளுக்கோஸ் அல்லது இனிப்புப் பானங்களையும் உடனே குடிக்கக் கொடுக்கலாம்.

« இதற்கடுத்து மருத்துவமனையில் சேர்த்து மாவுச் சத்துள்ள உணவை உட்கொள்ளச் செய்ய வேண்டும். மருத்துவப் பயனாளி மயக்க நிலையில் இருந்தால் உடனே ஊசியின்மூலம் குளுக்கோசைச் செலுத்த வேண்டும்.

«            சர்க்கரை குறைவது பற்றிய எச்சரிக்கையை மருத்துவப் பயனாளி குணமான பிறகு மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *