கடலூர் ஆசிரியை செ.செல்வராணி மறைவு: தமிழர் தலைவர் இறுதி மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கி.தண்டபாணி ஆகியோரின் சகோதரர் கி.கோவிந்தராஜன் அவர்களின் மருமகளும், செல்வாஸ் டிஜிட்டல் போஸ்டர் உரிமையாளரும், தி.மு.க.மாவட்ட பிரதிநிதியுமான  கி.கோ.செல்வமணி அவர்களின் வாழ்விணையருமான செ.செல்வராணி (ஆசிரியை, ஓய்வு) அவர்களின் மறைவையொட்டி, கடலூரிலுள்ள அவரது இல்லத்திற்கு 08.12.2025 திங்கட்கிழமை பகல் 11 மணிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் புதுவை ராசா, மறைந்த அம்மையாரின் இணையர் கி.கோ.செல்வமணி மகன்கள் செ.அருண்குமார், செ.ஆசைதம்பி மற்றும் திராவிடர் கழகத்தின் கடலூர், புதுச்சேரி மாவட்டத் தோழர்கள் உள்ளனர்.

தொடர்ந்து கழகத் தலைவரின் இணையர் மோகனா அம்மையார், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, செயலாளர் எழிலேந்தி, நகரத் தலைவர் தென்.சிவக்குமார், கடலூர் வேலு, புதுச்சேரி தமிழ்ச்செல்வன், லோ.பழனி மற்றும் மாவட்டத் தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

நேற்று  (7.12.2025) இரவு கூட்டத்தை முடித்துவிட்டு, நாகப்பட்டினத்தில் தங்கியிருந்த தமிழர் தலைவர் அவர்கள், இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் கடலூர் வந்து, மீண்டும் இன்று (8.12.2025) மாலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரைக்கால் விரைந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *