புற்றுநோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில் நுட்பம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 4 – மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பகுதியில் புற்று நோயை உண்டாக்கக்கூடிய கட்டி களைக் கண்டறியும் வகையில் மெசின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில் நுட்பத்தை சென்னை அய்அய்டி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.

இக்குழுவில் அய்அய்டி உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர் மைக்கேல் குரோமிஹா, ஆராய்ச்சி மாணவி மேத்தா பாண்டே. தனுஷா யேசுதாஸ், அனுஷா பருச்சூரி ஆகி யோர் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் கண்டறிந்துள்ள புதிய கணினி தொழில்நுட்பம் மூலம் மூளை மற்றும் தண்டுவடத்தில் வளரும் புற்று நோய் கட்டியையும் (க்ளையோ பிளாஸ் டோமா), அதன் வளர்ச்சி மற்றும் அதற் கான சிகிச்சை வாய்ப்பு களையும் துல்லிய மாக கண்டு பிடிக்கலாம். எந்த வகையான சிகிச்சையை நோயாளிக்கு அளிக்கலாம் என்பதையும் இதன் மூலம் கண்ட றியலாம் என்பது இதன் சிறப்பு அம்சம் என்று செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *