தஞ்சையில் பெரியார் படிப்பகத்தில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

அரசியல்

தஞ்சை, மே 4 29.04.2023 அன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாதாக்கோட்டை சாலை யில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133 – ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

புரட்சிக்கவிஞர் படத்திற்கு தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து, தந்தை பெரியார் சிலைக்கு மாநில ப.க.துணைத் தலைவர் கோபு.பழனி வேல் மாலை அணிவித்தார்.

கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை 

இரா.ஜெயக்குமார் புரட்சிக் கவிஞர் பற்றி ஒலி முழக்கமிட்டார்.

நிகழ்வில் மாநிலகிராமப் பிரச்சார அமைப் பாளர் முனைவர் க.அன்பழகன், மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்குநத்தம் 

ச.சித்தார்த்தன், மாநகர தலைவர் பா.நரேந் திரன், மாநில இளைஞரணி து.செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநகர ப.க. அமைப் பாளர் சாமி கலைச்செல்வன், தஞ்சை வடக்கு ஒன்றிய தி.க.செயலாளர் க.அரங்கராசன், மற்றும் இரா.வீரகுமார் , வீர.மகிழன், படிப்பக வாசகர்கள் பவர் வசந்தன், கார்த்திக்,  குழந்தைசாமி, ச.சந்தோசு, திருமானூர் பழ. பிரேம், ஓட்டுநர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *