சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நடைபெற்ற குருதிக் கொடைமுகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் மாட்சிகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 6– தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாளையொட்டி, 2.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாய் அமைந்தன. அதன் ஓர் அங்கமாக பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் குருதிக் கொடை வழங்கும் முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

குருதிக் கொடை முகாமை மருத்துவமனையின் ஒருங்கிணைப் பாளர் டாக்டர் ச.மீனாம்பாள் முன்னிலையில் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆர்.கவுதமன் துவக்கி வைத்தார்.

இம்முகாமில் திரளான பொது மக்கள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் மற்றும் தோழியர்கள் தமிழர் தலைவரின் பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை வழங்கி மகிழ்ந்தனர்.

முன்னதாக இம்மய்யத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் தர்ஷிணி ஆனந்த் மற்றும் டாக்டர் மீனாம்பாள் ஆகியோர் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கியும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில் தேனி மாவட்ட நர்சிங் கல்லூரி மேனாள் முதல்வர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி, மருத்துவமனை ஜி.தயாளன் மற்றும் செவிலியர் சந்தியா, சி.ஆக்னஸ், உமா லூதி (நற்சோனை) ஆகியோர் உடனிருந்து பணியாற்றினர்.

இந்த மருத்துவ முகாம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *