பெரியார் கல்வி நிறுவனத்தில் நிறுவனர் நாள் விழா மாணவர் திறமைகள் ஒளிர்ந்த சிறப்பு விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, டிச. 6– தமிழ்நாட்டின் பகுத்தறிவுச் சிந்தனை, மனிதநேயப் பாதை, மற்றும் சமூக மாற்றத்தின் ஒளி விளக்காகத்  திகழும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்தநாள் விழா, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்காக பள்ளியின் பல்வேறு மன்றங் களின் முயற்சியுடன் திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட் டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவுக்கே உரிய மாணவர் பங்கேற்பும் உற்சாகமும் நாள் முழுவதும் பள்ளி வளாகத்தை ஆற்றல்மிகு கலைவிழா நடைபெறும் இடமாக மாற்றியது.

நடைபெற்ற போட்டிகள்:

நாடகம் – சமூகச் செய்திகள் நிறைந்த அரங்கேற்றங்கள் பாராட் டைப் பெற்றன.

நடனம் – ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் கலைநயம் கலந்து ஒளிர்ந்த நிகழ்ச்சிகள்.

பேச்சு – ஆசிரியர் அய்யா அவர் களின் சிந்தனைகளை இளம் குரல் கள் தெளிவாகத் தாங்கிச் சென்றன.

கட்டுரை – மாணவர்களின் சிந்த னைத் திறனை வெளிப்படுத்தும் ஆசிரியர் குறித்த சரளமான எழுத் துப் படைப்புகள்.

கவிதை – உணர்ச்சியையும் கருத் தையும் இணைத்த அய்யாவிற்கான மனம்கவரும் வாழ்த்துக் கவிதைகள்.

பொன்மொழிகள் ஒப்புவித்தல் – தமிழர் தலைவரின் ஓங்கிய வழிகாட்டும் கருத்துகளை  நினைவு படுத்திய மாணவர்கள்.

இந்தப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களை உற்சாகப் படுத்தினார். தங்கள் திறமைகளை மேடையில் வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களையும் அவர் பாராட்டி, இவ்விழா மாணவர்களின் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க் கும் என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிகளுக்கான ஏற் பாடுகளைப் பள்ளியின் அனைத்து மன்றங்களின் பொறுப் பாசிரியர்கள் மிகச் சிறப்பாக ஒருங் கிணைத்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *