மழையால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.5 வருவாய்த் துறையு டன் இணைந்து 33 சதவீதத்துக்கு மேல் ஏற்பட்ட பயிர் பாதிப்பைக் கணக்கிட்டு இம்மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க, வேளாண் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தர விட்டுள்ளார்.

மழையால் பயிர்கள் பாதிப்பு

வடகிழக்குப் பருவமழை, டிட்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:

தமிழ்நாட்டில் மழை காரணமாக தற்போதைய நிலவரப்படி 68,226 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேத நிலைகளுக்கு ஏற்ப உரிய பயிர் மேலாண்மை ஆலோசனைகள் வழங்க வேண்டும். உடனடியாக, வருவாய்த் துறையுடன் இணைந்து ஆய்வு மூலம் 33 சதவீதத்துக்கு மேல் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து டிசம்பர் இறுதிக்குள் விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற இயற்கை இடற்பாடுகள் நேரங்களில் விதைகள், உரங்கள், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும். மறுபயிர் செய்வதற்குத் தேவையான விதைகள் இருப்பு வைக்க வேண்டும். கடந்த அக்டோபரில் பெய்த மழையால் 33 சதவீதம், அதற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணம் பெறுவதற்கான கருத் துருவை அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் வேளாண் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *